என் மலர்
உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த தலைமை ஆசிரியர்
- தீபாவளி சீட்டு பணம் மாதம் 20 ஆயிரம் வீதம் 11 மாதம் கட்டியுள்ளார்.
- பணம் கொடுக்க மறுத்து தகாத முறையில் செந்தில்குமரன் திட்டி உள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு துரோபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்ஆபிரகாம் பிரகாஷ் (வயது50). இவர் பின்னல்வாடி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் செந்தில்குமரன் என்பவரிடம் மாதமாதம் தீபாவளி சீட்டு பணம் மாதம் 20 ஆயிரம் வீதம் 11 மாதம் கட்டியுள்ளார்.
தற்போது பணத்தை வீட்டிற்கு சென்று கேட்டபோது பணம் கொடுக்க மறுத்து தகாத முறையில் செந்தில்குமரன் திட்டி உள்ளார்.அதிர்ச்சி அடைந்த ஆபிரகாம் பிரகாஷ் உளுந்தூர்பேட்ைட போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






