என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏரியில் மூழ்கி சிறுவன் சாவு
- வெங்கடேசன் தனது மகனை அழைத்து கொண்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள முனிகவுண்டன் ஏரிக்கு வந்தார்.
- ஹேமந்த் நீச்சல் தெரியாமல் ஆழத்திற்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் எத்திகொண்டபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ேஹமந்த் (வயது10). இந்த நிலையில் வெங்கடேசன் தனது மகனை அழைத்து கொண்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள முனிகவுண்டன் ஏரிக்கு வந்தார்.
அப்போது அங்கு தனது மகனுடன் அவர் குளிக்க சென்றார். இதில் ஹேமந்த் நீச்சல் தெரியாமல் ஆழத்திற்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






