என் மலர்
உள்ளூர் செய்திகள்

தலைவாசல் சட்டமன்ற காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
- காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
- அவரது உடலுக்கு அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூரை சேர்ந்த வையாபுரி மனைவி ராஜம்மாள் (வயது 84).
இவர் 1980-ல் அப்போதைய தலைவாசல் சட்டமன்ற தொகுதியில் (தற்போது கெங்கவல்லி) காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-ல் மீண்டும் வெற்றி பெற்றார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். 1989-ல் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தபோது ஜெயலலிதா அணியில் தலைவாசல் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் வயது முதிர்வு, உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
Next Story






