என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் 6 பட்டாகத்தி-கஞ்சாவுடன் வாலிபர் கைது
- பொன்னேரி அடுத்த பள்ளம் பகுதியில் 6பட்டாகத்தி, கஞ்சாவுடன் பதுங்கி இருந்த கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டி, சிறு புழல் பேட்டை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணா(23). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அவரை நேற்று இரவு போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிவிட்டார். இந்தநிலையில் பொன்னேரி அடுத்த பள்ளம் பகுதியில் 6பட்டாகத்தி, கஞ்சாவுடன் பதுங்கி இருந்த கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர். எண்ணூரில் தனது அண்ணனை வெட்டியவர்களை கொலை செய்வதற்காக குற்றாலம் சென்று கத்தி வாங்கி வந்ததாக தெரிவித்து உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story






