search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் அருகே பனியன் கம்பெனி உரிமையாளர் மீது இளம்பெண் புகார்
    X

    அன்னூர் அருகே பனியன் கம்பெனி உரிமையாளர் மீது இளம்பெண் புகார்

    • கம்பெனிக்கு விரைந்து சென்று எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் கம்பெனி உரிமையாளரை கண்டித்தனர்.
    • வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த பனியன் கம்பெனி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அ.குமாரபாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் குமாரபாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். சம்பவத்தன்று நான் டெய்லரிங் எந்திரத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது துணி எந்திரத்தில் சிக்கி கொண்டது. இதனை சரி செய்ய நான் பனியன் கம்பெனி உரிமையாளரை அழைத்தேன். உடனடியாக அங்கு வந்த உரிமையாளர் சரி செய்வது போல நடித்து எனது உடலில் கை வைத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    உடனடியாக நான் இது குறித்து எனது ஆண் நண்பர்களுக்கு தெரிவித்தேன். அவர்கள் கம்பெனிக்கு விரைந்து சென்று எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் கம்பெனி உரிமையாளரை கண்டித்தனர். எனவே வேலை செய்யும் இடத்தில் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் கம்பெனி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×