என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
    X

    திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    • திருவொற்றியூர் ஒத்தவாடை தெருவில் தனியாருக்கு சொந்தமான சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.
    • மின்சாரம் தாக்கி ரவி தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் ஒத்தவாடை தெருவில் தனியாருக்கு சொந்தமான சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த தொழிலாளி ரவி (வயது19) வேலை பார்த்து வந்தார். இவர் திருவொற்றியூர் கார்கில் நகரில் தங்கி இருந்தார். நேற்று உருளைக்கிழங்கு சிப்ஸ் போடுவதற்காக மெஷினை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ரவி தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×