என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருநின்றவூரில் மின்சாரம் தாக்கி பெண் பலி
- மின்சாரம் தாக்கி மேகலா தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
- திருநின்றவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநின்றவூர்:
திருநின்றவூர், பள்ளக் கழனி, பால முருகன் நகரை சேர்ந்தவர் சத்யா. இவரது மனைவி மேகலா(வயது38).இன்று காலை அவர் துணியை காயவைக்க வீட்டின் மாடிக்கு சென்றார்.
அங்கு வீட்டுக்கு வரும் மின்வயருக்காக வைக்கப்பட்டு இருந்த கம்பியில் கயிறு கட்டப்பட்டு இருந்தது. அதில் துணியை காயவைத்த போது மின்சாரம் தாக்கி மேகலா தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






