என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை
- கணவர் இறந்த சோகத்தில் இருந்த வசந்தி வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெரும்புதூர் குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் மணவாளன். விவசாயி.
இவரது மனைவி வசந்தி (வயது55). இவர்களுக்கு குழந்தை இல்லை.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்கோளாறு காரணமாக மணவாளன் திடீரென உயிரிழந்தார். இதனால் வசந்தி மிகவும் மனவேதனை அடைந்தார்.அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்தநிலையில் கணவர் இறந்த சோகத்தில் இருந்த வசந்தி வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வசந்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பை பாஸ் சாலை, பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கக்கன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேகா.
திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 மகன்களும் யோகலட்சுமி (9) என்ற ஒரு மகளும் உள்ளனர். சீனிவாசன் மது போதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த சீனிவாசன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் முன்னதாக மனைவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






