என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் அருகே டிரைவர் அடித்துக்கொலை
    X

    விருதுநகர் அருகே டிரைவர் அடித்துக்கொலை

    • விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவரது மகன் விக்னேஷ்வரன்.
    • வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவரது மகன் விக்னேஷ்வரன் (வயது 25). இவர் சில வருடங்களாக சின்ன வாடியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் நரேஷ்குமார். கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்கனவே இவருக்கும், தாதம்பட்டியைச் சேர்ந்த மதன்குமாருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக விக்னேஷ்வரன் செல்போனில் மதன்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    சம்பவத்தன்று விக்‌னேஷ்வரன் சென்னல்குடிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் செல்வக்குமார் என்பவருடன் சின்ன வாடியூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கன்னிசேரி புதூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மதன்குமார், அவரது நண்பர்கள் மகாராஜா, டி.காமராஜபுரத்தைச் சேர்ந்த கருப்புராஜா, துலுக்கப்பட்டியைச் சேர்ந்த குணா ஆகிய 4 பேர் விக்னேஷ்வரனிடம் தகராறு செய்தனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மதன்குமார் உள்பட 4 பேரும் விக்னேஷ்வரன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.சிறிது நேரத்திற்கு பின் அந்தப்பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள் தலையிட்டு தாக்குதலை நிறுத்தினர். அதன் பின் அந்த கும்பல் அங்கிருந்து சென்றது.

    இந்த சம்பவத்திற்கு பின் விக்னேஷ்வரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சின்ன வாடியூரில் உள்ள வீட்டுக்கு வந்தபோது உடல்நிலை மோசமானதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ்வரன் இறந்தார். இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்னேஷ்வரனை தாக்கிய மதன்குமார், மகாராஜா, கருப்பு ராஜா, குணா ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×