search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே பணத் தகராறில் அ.தி.மு.க. செயலாளர் மீது தாக்குதல்- ஒன்றிய செயலாளர் மீது வழக்கு
    X

    விழுப்புரம் அருகே பணத் தகராறில் அ.தி.மு.க. செயலாளர் மீது தாக்குதல்- ஒன்றிய செயலாளர் மீது வழக்கு

    • பணத்தை கொடுத்தவர்கள் பேட்டை முருகன் வீட்டிற்கு சென்றனர்.
    • அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பேட்டை முருகன் (வயது 46). இவரது உறவினர் உதயசூரியன் (56). அ.தி.மு.க. கிளைக் கழக செயலாளராக உள்ளார். இவர் பேட்டை முருகன் மூலம் கிடைக்கும் அரசு ஒப்பந்த பணிகளை செய்து வந்தார். மேலும், பேட்டை முருகனின் பினாமியாக உதயசூரியன் உள்ளார்.

    இந்நிலையில் தமிழக அரசின் சத்துணவு பிரிவில் வேலை வாங்கி கொடுப்பதாக அவரது உறவினர்கள் ஒரு சிலரிடம் உதயசூரியன் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆட்சி மாறிவிட்டதால் பணி கிடைக்காது என்பதால் பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி அளிக்குமாறு உதயசூரியனிடம் கேட்டனர். அதற்கு உதயசூரியன் வேலைக்காக வாங்கிய பணத்தை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பேட்டை முருகனிடம் கொடுத்து விட்டேன். அவர் திருப்பி அளித்தால் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

    இதனால் பணத்தை கொடுத்தவர்கள் பேட்டை முருகன் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு வந்த பேட்டை முருகன் காரை வழி மறித்து பணத்தை கேட்டனர். அப்போது தன்னிடம் பணம் ஏதும் உதயசூரியன் தரவில்லை. மேலும், உங்களிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கியதே எனக்கு தெரியாது என்று பேட்டை முருகன் கூறினார். இருந்த போதும் பணத்தை கொடுத்தவர்கள் இதனை ஏற்காமல் பணத்தை திருப்பித்தர பேட்டை முருகனிடம் வலியுறுத்தினர்.

    இதனால் ஆத்திரமடைந்த பேட்டை முருகன், மணிகண்டன், கலையரசன், பிரபாகரன், கார்த்திக், ராஜி ஆகியோர் நேற்று இரவு 8.45 மணியளவில். அ.தி.மு.க. கிளை செயலாளர் உதயசூரியன் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த உதயசூரியன், அவரது மகன் சதீஷ்குமார், சரத்குமார், ஆகாஷ் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த 5 பேரும் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் வளவனூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×