search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி கோரி தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவிப்பு
    X

    அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி கோரி தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவிப்பு

    • சிலை அமைப்பதற்கு வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி இல்லை என போலீசார் உதவியுடன் சிலையை அகற்றினர்.
    • அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் கவனத்திற்கு மீண்டும் அம்பேத்கர் சிலை அமைக்கும் வரை பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறியுள்ளனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தோக்கவாடி கிராமத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது.

    இந்த சிலை அமைப்பதற்கு வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி இல்லை என போலீசார் உதவியுடன் சிலையை அகற்றினர். அதனை செங்கம் பேரூராட்சி வளாகத்தில் பாதுகாப்புடன் வைத்தனர்.

    இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கேட்டும் இதுவரை அனுமதி கிடைக்காததால் அப்பகுதி மக்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகை வைத்துள்ளனர்.

    அதில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் கவனத்திற்கு மீண்டும் அம்பேத்கர் சிலை அமைக்கும் வரை பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறியுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×