என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துமலை அருகே மின்சாரம் தாக்கி டிரைவர் பலி- உறவினர்கள் போராட்டம்
    X

    ஊத்துமலை அருகே மின்சாரம் தாக்கி டிரைவர் பலி- உறவினர்கள் போராட்டம்

    • கஜேந்திரன் தோட்டத்தில் காட்டுப்பன்றி அட்டகாசத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் அடிபட்டு பலியாகி இருப்பது தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த கீழக்கலங்கல் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 40). லோடு ஆட்டோ டிரைவர்.

    இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்துமலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில் கஜேந்திரன் தோட்டத்தில் காட்டுப்பன்றி அட்டகாசத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் அடிபட்டு பலியாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே உயிரிழந்த கஜேந்திரன் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அதுவரை அவரது உடலை எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறி கஜேந்திரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கீழ கலங்கல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்களுடன் பழனிநாடார் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ. கெங்காதேவி, டி.எஸ்.பி. சகாயஜோஸ், தாசில்தார் தெய்வசுந்தரி, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் , சுதந்திர தேவி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×