என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை
- மனவேதனை அடைந்த ரோஜா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பென்னாலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள அனந்தேரி கிராமத்தை சேர்ந்தவர் மோனேஷ் பாபு.என்ஜினீயர். இவருக்கும் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள புண்ணியப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரோஜா (வயது27) என்பவருக்கும் 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் ரோஜா மன வருத்தத்தில் இருந்தார். மேலும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த ரோஜா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பென்னாலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






