என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை பேரூராட்சி கூட்டம்
- ஊத்துக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
- அடையாள அட்டைகளை வார்டு கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் கலாதரன் வழங்கினார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குமரவேல், செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அருணாச்சலம், ஆனந்தி ஆகியோர் பேசும் போது மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்பேத்கர் படங்களை மன்றக் கூட்டத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தி.மு.க. கவுன்சிலர் கோகுலகிருஷ்ணன் பேசும்போது பேரூராட்சியில் 100 கிலோ வாட் சோலார் மின்உற்பத்தி மையத்தை ஏற்படுத்தினால் பேரூராட்சி நிர்வாகத்தின் மின் கட்டணத்தை வெகுவாக குறைக்கலாம் என்று தெரிவித்தார். கூட்ட முடிவில் அடையாள அட்டைகளை வார்டு கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் கலாதரன் வழங்கினார்.
Next Story






