என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே லாரிகளில் திருடிய 3 வாலிபர்கள் கைது
    X

    ஊத்துக்கோட்டை அருகே லாரிகளில் திருடிய 3 வாலிபர்கள் கைது

    • லாரிகளில் இருந்த உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
    • சப் இன்ஸ்பெக்டர் பரமசிவன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட கிருஷ்ணன். எம் சான்ட் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 5 லாரிகளை நிறுத்தி வைத்து இருந்தார். இந்த நிலையில் லாரிகளில் இருந்த உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வெங்கட கிருஷ்ணன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பரமசிவன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் லாரிகளில் திருடியது ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி(25), நரேஷ் குமார்(20), சதீஷ்(22) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×