search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரப்பாக்கம் ஊராட்சியில் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாரும் பணி- வரலட்சுமி மதுசூதனன் எம். எல். ஏ. தொடங்கி வைத்தார்
    X

    ஊரப்பாக்கம் ஊராட்சியில் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாரும் பணி- வரலட்சுமி மதுசூதனன் எம். எல். ஏ. தொடங்கி வைத்தார்

    • தொண்டு நிறுவனங்கள் இணைந்து ரூ. 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், வெங்கட்டராகவன், இன்ஜினியர் விஜயசந்திரன், ஊராட்சி செயலர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூடுவாஞ்சேரி:

    ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஐயஞ்சேரி பகுதியில் உள்ள பாதாளீஸ்வரர் கோவில் குளத்தை தூர்வாரவும், குளக்கரை மீது நடைபாதை அமைக்கவும், மின் விளக்குகள் அமைக்கவும் ஒருங்கிணைந்த பன்னாட்டு அரிமா சங்கம், மோபீஸ் இந்தியா மற்றும் எக்ஸ்னோரா ஆகிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து ரூ. 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து குளத்தை தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி தலைமையில் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் சுப்பிரமணி, சீனிவாசன், பாண்டியலட்சுமி, கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் வரலட்சுமிமதுசூதனன் எம்.எல்.ஏ., காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு குளம் தூர் வாரும் பணிக்காக பூமி பூஜையை தொடங்கி வைத்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், வெங்கட்டராகவன், இன்ஜினியர் விஜயசந்திரன், ஊராட்சி செயலர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×