என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- வாலிபர் பலி
    X

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- வாலிபர் பலி

    • விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
    • திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த இருளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யகுமார் (வயது19) தனியார் கம்பெனி ஊழியர். இவர் தனது நண்பரான சிபியுடன் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை சிறுவானூர் அருகே சென்றபோது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த திவ்யகுமாரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் திவ்யகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சி பி லேசான காயத்துடன் தப்பினார்.

    விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.அப்போது லாரியை திருப்பும் போது சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் டீசல் டேங்க் சேதமடைந்து திடீரென தீப்பிடித்தது. இதில் லாரி முழுவதும் தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    சாலையின் நடுவே லாரி நின்றதால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

    Next Story
    ×