search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.7.73 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்
    X

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.7.73 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

    • திருச்சியில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் விமானங்களில் வெளிநாட்டு பணம் கடத்தி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
    • விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, திருச்சியில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் விமானங்களில் வெளிநாட்டு பணம் கடத்தி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அவரது உடமைகளை சோதனை செய்த போது அவர் அணிந்திருந்த காலணியில் ரூ.7.73 லட்சம் மதிப்பிலான 9600 அமெரிக்க டாலர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×