search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுலா பயணிகளை கவர்கிறது பர்லியார், பொக்காபுரத்தில் பூத்துகுலுங்கும் நாகலிங்க மலர்
    X

    பர்லியாறு பகுதியில் பூத்து குலுங்கும் நாகலிங்க மலர்

    சுற்றுலா பயணிகளை கவர்கிறது பர்லியார், பொக்காபுரத்தில் பூத்துகுலுங்கும் நாகலிங்க மலர்

    • நீண்ட கிளைகள் போன்ற காம்புகளில் பூக்கள் பூப்பதால் மரமே பூக்கள் நிறைந்து காட்சியளிக்கும்.
    • ஒரு மரத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக ஆயிரம் மலர்கள்கூடப் பூக்கலாம்.

    ஊட்டி:

    இளஞ்சிவப்பு வண்ணமும், சிவப்பு வண்ணமும் கலந்து மாறுபட்ட தோற்றத்துடன் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது நாகலிங்க மலர்கள்.

    மிதமான தட்பவெப்ப நிலையில் வளரும் தன்மை கொண்ட இந்த மரங்கள், நீலகிரி மாவட்டம் பர்லியாறு, பொக்காபுரம் பகுதியில் அதிகம் காணப்படுகின்றது.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையோரம் பர்லியாறு பகுதியில் நாகலிங்க மலர்கள் தற்போது பூத்து குலுங்கி வருகிறது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுத்து வருகிறது. இதனால் இவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் அதனை பார்த்து பார்த்து ரசிப்பதுடன் புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.

    இதன் காய்கள் பீரங்கி குண்டுகள் போல் இருப்பதால் ஆங்கிலத்தில் பீரங்கி குண்டு மரம் எனவும் அழைக்கப்படும். மேலும் நாகபாம்பு வடிவிலும், சிவலிங்கம் போலும் இருப்பதால் நாகலிங்க மலர்கள் என அழைக்கப்படுகிறது. இம்மரத்தில் ஆண்டுதோறும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் மலர்கள் பூத்து குலுங்கும்.

    நீண்ட கிளைகள் போன்ற காம்புகளில் பூக்கள் பூப்பதால் மரமே பூக்கள் நிறைந்து காட்சியளிக்கும். ஒரு மரத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக ஆயிரம் மலர்கள்கூடப் பூக்கலாம். நம் நாட்டைத் தவிர்த்த பல நாடுகளில் அலங்காரத்துக்காக இம்மரம் வளர்க்கப்படுகிறது.

    பாம்பு படமெடுப்பது போன்ற மலரின் தோற்றத்தால் இந்த மலர் புனிதமாகக் கருதப்படுகிறது. நாகலிங்கப் பழம் மகாவிசேஷம் ஒவ்வொரு பழமும் ஒரு கால்பந்து அளவுக்கு இருக்கும். அதில் 65 முதல் 550 விதைகள் வரை இருக்கும். இவைகள் முதிர்ச்சி அடைய சுமார் 12 லிருந்து 18 மாதங்கள் வரை ஆகுமாம்.

    Next Story
    ×