search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்டையார்பேட்டையில் ஆட்டோவில் தூங்கிய தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை
    X

    தண்டையார்பேட்டையில் ஆட்டோவில் தூங்கிய தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை

    • ஆட்டோவில் தூங்கிய தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விரைந்து வந்து மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் என்கிற பல்லு மோகன் (வயது 33).திருமண பந்தல், சமையல் ஆர்டர் எடுத்து தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் புது வண்ணாரப்பேட்டை , அருணாச்சல ஈஸ்வரர் கோயில் தெருவில் உள்ள முருகன் கோவில் விழாவுக்காக பந்தல் போடும் பணியில் இருந்தார். நேற்று இரவு வேலை முடிந்ததும் மதுபோதையில் இருந்த மோகன் அதே தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோவில் படுத்து தூங்கினார்.

    இதற்கிடையே இன்று அதிகாலை ஆட்டோவை எடுப்பதற்காக டிரைவர் ஒருவர் வந்த போது ஆட்டோவுக்குள் மோகன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மோகன் கொலை செய்யப்பட்டது ஏன்? கொலையாளிகள் யார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆட்டோவில் தூங்கிய தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×