என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூரில் 9-ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
    X

    திருவொற்றியூரில் 9-ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

    • ரிஷிக்கு சரியாக படிப்பு வராததால் அவரை ஒழுங்காக படிக்கும்படி பெற்றோரும் உறவினர்களும் கூறியுள்ளனர்.
    • மனமுடைந்த ரிஷி நேற்று குளியல் அறையில் லுங்கியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் ஜோதி நகர் ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் பரிமளராஜ், இவரது மகன் ரிஷி (வயது 15). எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். ரிஷிக்கு சரியாக படிப்பு வராததால் அவரை ஒழுங்காக படிக்கும்படி பெற்றோரும் உறவினர்களும் கூறியுள்ளனர்.

    இதனால் மனமுடைந்த ரிஷி நேற்று குளியல் அறையில் லுங்கியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி றார்.

    Next Story
    ×