என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் போலீஸ் வாகனத்தை சேதப்படுத்திய 3 வாலிபர்கள் கைது
    X

    மதுரையில் போலீஸ் வாகனத்தை சேதப்படுத்திய 3 வாலிபர்கள் கைது

    • மதுரை திடீர் நகர் தெற்கு மெயின் ரோட்டை சேர்ந்த பாண்டி மனைவி விமலா (வயது 35).
    • போலீசார் திடீர்நகர் அவுட் போஸ்ட் பகுதியில் பதுங்கி இருந்த 4 பேரை சுற்றி வளைத்தனர்.

    மதுரை:

    மதுரை திடீர் நகர் தெற்கு மெயின் ரோட்டை சேர்ந்த பாண்டி மனைவி விமலா (வயது 35). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் விமலா நேற்று இரவு வீட்டின் முன்பாக நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த திடீர்நகர் ராஜேந்திரன் மகன் சியாம் (18), யாசின், பாஸ்கர் என்ற சுண்டு, ராஜசேகர் மகன் முத்து (18) ஆகிய 4 பேரும் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். இதில் விமலாவுக்கு சரமாரி அடி உதை விழுந்தது. எனவே விமலா இதுதொடர்பாக திடீர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் திடீர்நகர் அவுட் போஸ்ட் பகுதியில் பதுங்கி இருந்த 4 பேரை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் போலீஸ் வாகனங்கள் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள். இதில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    இருந்தபோதிலும் திடீர் நகர் போலீசார் ராஜேந்திரன் மகன் சியாம் (18) பாஸ்கர் என்ற சுண்டு, மற்றும் ராஜசேகர் மகன் முத்து (18) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×