என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் படகில் இருந்து தவறி விழுந்து சென்னை மாணவர் பலி
- படகு சவாரி சென்ற போது திடீரென ஜெனிட்டோ படகில் இருந்து தவறி தண்ணீரில் விழுந்தார்.
- போலீசார், மீனவர்கள், மீட்பு துறையினர் விரைந்து சென்று அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாத்திமா நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ஜெரி. இவரது மகன் ஜெனிட்டோ (வயது 19). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி ஊருக்கு வந்திருந்தார். நேற்று நண்பர்களுடன் புதிய துறைமுகம் அருகே உள்ள உப்பாற்று ஓடைக்கு குளிக்க சென்றார். பின்னர் நேற்று இரவு அவர்கள் படகு சவாரி சென்றனர்.
உப்பாற்று ஓடையானது மிகவும் ஆழம் கொண்டது. மேலும் இது கடலில் சென்று சேருகிறது. படகு சவாரி சென்ற போது திடீரென ஜெனிட்டோ படகில் இருந்து தவறி தண்ணீரில் விழுந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் தெர்மல் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார், மீனவர்கள், மீட்பு துறையினர் விரைந்து சென்று அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகுநேரம் ஆகியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று காலை 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. அப்போது ஜெனிட்டோ சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்