என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி 2 பேர் பலி
    X

    திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி 2 பேர் பலி

    • திருவேங்கடம் மற்றும் ரமேஷ் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே உள்ள கருந்து வம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் திருவேங்கடம் (வயது 30).ஆடு மேய்க்கும் தொழிலாளி. ரமேஷ் (40) செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

    நேற்று கருந்துவம்பாடி கிராமத்தை ஒட்டி உள்ள ஏரியில் திருவேங்கடம் ஆடு மேய்க்க சென்றார். மாலை 5 மணிக்கு பிறகு அவரை காணவில்லை.

    இதனால் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஏரியில் உள்ள குட்டையில் இறங்கி தேடினர்.அப்போது சேற்றில் சிக்கி மூழ்கி இருந்த திருவேங்கடத்தை பிணமாக மீட்டனர். அதே குட்டையில் அவருடைய ஆட்டுக்குட்டி ஒன்றும் பிணமாக மீட்கப்பட்டது.

    இதை கண்ட அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த நிலையில் இரவு செங்கல் சூளை தொழிலாளர் ரமேஷையும் காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடினர். இன்று காலையில் திருவேங்கடம் பிணமாக மீட்கப்பட்ட ஏரி குட்டையில் ரமேஷ் பிணமாக மிதந்தார்.

    இதனைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருவேங்கடம் மற்றும் ரமேஷ் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஏரி பள்ளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்க சென்ற திருவேங்கடம் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம். அந்த நேரத்தில் ரமேஷ் அவரை காப்பாற்ற சென்று அவரும் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×