என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதியோர் இல்லத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
- திருவள்ளூரை அடுத்த பிரயாங்குப்பம் கிராமத்தில் தனியார் முதியோர் இல்லம் உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பிரயாங்குப்பம் கிராமத்தில் தனியார் முதியோர் இல்லம் உள்ளது. இங்கு உதயநாத் பரிடா (29) என்பவர் தங்கி வேலை பார்த்து வந்தார். அங்குள்ள விளக்குகள் எரியாததால் உதயநாத் பரிடா சரிசெய்ய முயன்றார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






