என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருமழிசையில் அடுத்தடுத்து பெண் வியாபாரி- மூதாட்டியிடம் நகை பறிப்பு
- வெள்ளையம்மாள் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
பூந்தமல்லி அடுத்த திருமழிசை பிரியம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஸ்ரீபிரியா (43). இவர்கள் திருமழிசை, ஜவகர் தெருவில் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.
நேற்று மாலை ஸ்ரீபிரியா கடையில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் சிகரெட் வாங்குவது போல் ஸ்ரீ பிரியாவிடம் பேச்சு கொடுத்தனர்.
திடீரென அவர்கள் ஸ்ரீபிரியா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறிக்க முயன்றனர். இதில் நகை அறுந்ததில் 7 பவுன் நகையுடன் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா கா ட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (63). இவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த மர்ம வாலிபர்கள் வெள்ளையம்மாள் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இந்த 2 சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்