என் மலர்
உள்ளூர் செய்திகள்

மில்லில் வேலை பார்த்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
- சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் ராஜா.
- கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் ராஜா (36).இவர் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மில்லில் வேலை பார்த்து வருகிறார். தினமும் எடப்பாடியில் இருந்து கருங்கல்பாளையத்திற்கு வந்து சென்றார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் ராஜா பணியில் இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த வரை உடன் பணிபுரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






