என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரணாம்பட்டு அருகே மூதாட்டி கொலை- உறவினர்கள் போராட்டம்
    X

    பேரணாம்பட்டு அருகே மூதாட்டி கொலை- உறவினர்கள் போராட்டம்

    • கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வள்ளியம்மாள் மகன் வடிவேல் வீட்டில் வசித்து வந்தார்.
    • போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா, பாஸ்மார் பெண்டா மலைப்பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.விவசாயி. இவர் சகோதரிகளான வள்ளியம்மாள் (வயது 60), முனியம்மாள் என 2 பேரை திருமணம் செய்து கொண்டு உள்ளார்.

    முதல் மனைவியான வள்ளியம்மாளுக்கு தங்கராஜ், வடிவேல், தங்கமணி, ஜெயலட்சுமி என 3 மகன்கள் 1 மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வள்ளியம்மாள் மகன் வடிவேல் வீட்டில் வசித்து வந்தார். இவர் தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலை 6 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை ஆடுகளை ஓட்டி வந்து வீட்டில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இன்று காலை 6 மணிக்கு அங்குள்ள விவசாய நிலத்தில் தலை, முகம் பாறாங்களால் சிதைத்து ஆடைகள் கலைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    வள்ளியம்மாள் கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்த அவரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து கொலையாளிகளை கைது செய்த பின்பு வள்ளியம்மாள் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

    போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றபோது ஏற்பட்ட தகராறில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×