உப்பாறு அணையில் கால்நடைகளுடன் குடியேறி பொதுமக்கள் போராட்டம்

ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த அணையை நம்பி உள்ளனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
உப்பாறு அணையில் கால்நடைகளுடன் குடியேறி பொதுமக்கள் போராட்டம்
Published on

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ருத்ராவதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உப்பாறு அணை உள்ளது. இந்த அணை மூலம் நேரடியாக 6500 ஏக்கரும், மறைமுகமாக 15000 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த அணையை நம்பி உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

இந்த அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் திறக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள், விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

இதனை கண்டித்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் நேற்றிரவு உப்பாறு அணையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே சம்பவ இடத்திற்கு தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 22-ந்தேதி கலெக்டரிடம் பேசி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவி ட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com