என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே தலைமை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே தலைமை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் 16 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாநில நிர்வாகிகள் கண்ணதாசன், கணேசன், பாண்டியன், தாஸ், குப்புசாமி, மாவட்டச் செய்தி தொடர்பாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் ராஜு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இதில் 50க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 16 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் அரவிந்த் நன்றி கூறினார்.

    Next Story
    ×