search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலி இடங்களை நிரப்பக்கோரி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்
    X

    காலி இடங்களை நிரப்பக்கோரி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்

    • 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள காலி பணியிடங்களில் வயதுவரம்பின்றி பணிநியமனம் செய்ய வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

    சென்னை:

    தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    மாநில தலைவர் ரத்தின குமார் தலைமையில் நடந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    2010-ல் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு பணி நியமனம் பெற்றவர்கள் போக மீதமுள்ள 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள காலி பணியிடங்களில் வயதுவரம்பின்றி பணிநியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

    போராட்டம் குறித்து ரத்தின குமார் கூறியதாவது:-

    2014-ம் ஆண்டிற்கு பிறகு பணி நியமனம் செய்யப்படவில்லை. தமிழகத்தில் 9,176 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் 2 ஆயிரம் பேர் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எங்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும்.

    அதேபோல 1743 இடைநிலை ஆசிரியர் பணி இடங்கள் தற்போது காலியாக உள்ளன. அவற்றில் பாதிக்கப்பட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு எங்களை வஞ்சித்தது. தி.மு.க. அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×