என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாம்பரம் அருகே பூசாரி தற்கொலை
- இன்று காலை அவர் வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார்.
- சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த இரும்புலியூர், ஏரிகரை தெருவை சேர்ந்தவர் வெங்கடேச பெருமாள் என்கிற ஆகாஷ்(வயது22). இவர் வீட்டிலேயே அங்காள பரமேஸ்வரி கோவில் கட்டி அதில் பூசாரியாக இருந்து வந்தார்.
இன்று காலை அவர் வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






