என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிளஸ்-1 தேர்வில் தோல்வி: மாணவன் விஷம் குடித்து தற்கொலை
- ஜமீன்தார் சாயமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.
- இந்நிலையில் கடந்த 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளிவந்தது. இதில் ஜமீன்தார் 4 பாடங்களில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அய்யாபுரம் செம்பகுளம் மேலத் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி மனைவி, குழந்தைகளை பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து ராமசாமியின் மனைவி தனது குழந்தைகளுடன் அவரது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார்.
இவர்களது மகன் ஜமீன்தார் (வயது 18) சாயமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். இந்நிலையில் கடந்த 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளிவந்தது. இதில் ஜமீன்தார் 4 பாடங்களில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஜமீன்தார் அன்றைய தினமே வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டான். அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜமீன்தார் பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்