என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி மாணவன் பலி
- அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வருபவர் ஆனந்தராஜ். இவரது மகன் அர்ஷத் (வயது 12).
- கல்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி மாணவன் பலியானார்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வருபவர் ஆனந்தராஜ். இவரது மகன் அர்ஷத் (வயது 12). அங்குள்ள அணுசக்தி துறை பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மதியம் அவர் அணுமின் நிலையத்தின் குடியிருப்பு பகுதி பக்கிங்காம் கால்வாயில் நண்பர்களுடன் குளித்தார். அப்போது அந்தத் தண்ணீரில் மூழ்கினார். உடன் குளித்த நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து முட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கரையோரம் புதரில் சிக்கி இருந்த அர்ஷத்தின் உடலை மீட்டனர். இது குறித்து கல்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருக்கழுக்குன்றம் அடுத்த விளாகம் பகுதியை சேர்ந்தவர் தம்புராட்டி. இவரது மகன் தினேஷ் (வயது 19). பாலாற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி தினேஷ் பலியானார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலுசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






