என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றகோரி போராட்டம்
- மழை நீர் தேங்கி உள்ளதால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
- ஆக்கிரமிப்பு சாலையை மீட்க கோரி அப்பகுதி மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு மகேஷ் குமார் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பதிக்குச் செல்லும் சாலை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. தற்போது அப்பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு சாலையை மீட்க கோரி அப்பகுதி மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கவுன்சிலர் பரிமளா அருண்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Next Story






