search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தணி அருகே நகைக்கடை உரிமையாளர்-மகனை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்
    X

    திருத்தணி அருகே நகைக்கடை உரிமையாளர்-மகனை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்

    • ஹேமந்த் குமாரும், அவரது மகனும் காரை நிறுத்தாமல் சென்று விட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த ஆர்.கே. பேட்டை அருகே உள்ள அம்மையார்குப்பம் சேர்ந்தவர் பகுதியை ஹேமந்த் குமார். இவர் அம்மையார்குப்பம் மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் நகைக்கடைநடத்தி வருகிறார்.

    வாரத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் காரில் சென்னைக்கு சென்று தங்க நகைகள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்றுகாலை அவர், மகனுடன் நகைகளை வாங்க சென்னைக்கு ரயில் மூலம் சென்றார். பின்னர் இரவு நீண்டநேரம் ஆனதால் அவர் நகைகளை பிறகு எடுத்துக் கொள்வதாக கூறிவிட்டு மீண்டும் ரயில் மூலம் திருத்தணிக்கு வந்தார்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் அம்மையாருக்கு குப்பத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். வேலன் கண்டிகை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென கார் மீது கற்களை வீசினர். மேலும் துப்பாக்கியை காட்டியும் மிரட்டினர்.

    ஆனால் ஹேமந்த் குமாரும், அவரது மகனும் காரை நிறுத்தாமல் சென்று விட்டனர்.

    வழக்கம்போல் நகையுடன் ஹேமந்த் குமார் வருவார் என்று நினைத்து மர்ம கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×