search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே பரபரப்பு கிராமசபை கூட்டத்தில் அடிதடி-மோதல்
    X

    பண்ருட்டி அருகே பரபரப்பு கிராமசபை கூட்டத்தில் அடிதடி-மோதல்

    • பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஜெய்சங்கர் கூட்டத்தில் கிராம கணக்கு வழக்கு விபரம் குறித்து கேட்டார்.
    • பஞ்சாயத்து துணைதலைவர் வசந்தியின் கணவர் வீரமணிக்கும், ஜெய்சங்கருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் ஊராட்சியில் இன்று காந்தி பிறந்தநாளையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது. இதையொட்டி பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் வசந்தி வீரமணி மற்றும் யூனியன் அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதோடு கிராம மக்களும் திரண்டு வந்திருந்தனர்.

    அப்போது பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஜெய்சங்கர் கூட்டத்தில் கிராம கணக்கு வழக்கு விபரம் குறித்து கேட்டார். இதனால் பஞ்சாயத்து துணைதலைவர் வசந்தியின் கணவர் வீரமணிக்கும், ஜெய்சங்கருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது மோதலாக வெடித்து அடிதடியாக மாறியது.

    இந்த மோதலில் வீரமணி தாக்கப்பட்டார். இதனால் அங்கிருந்த கிராம பெண்கள் சிதறி ஓடினார்கள். இதனால் கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. படுகாயம் அடைந்த வீரமணி பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×