search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் நண்பர்களிடம் போலீசார் விசாரணை
    X

    ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் நண்பர்களிடம் போலீசார் விசாரணை

    • நாகராஜுடன் மது குடிக்க சென்ற நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கொலையாளிகளை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுனில் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் ஊராட்சியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது41). அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார்.

    நேற்றுமாலை நாகராஜ், மது குடிப்பதற்காக கிளாய் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அருகே தனது நண்பர்களுடன் சென்றார்.

    அப்போது நண்பர் ஒருவர் கூடுதலாக மது வாங்கிவிட்டு திரும்பி வந்த போது நாகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடன் இருந்த மற்ற நண்பர்கள் மாயமாகி இருந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நாகராஜின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. நாகராஜுடன் மது குடிக்க சென்ற நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுனில் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கொலையுண்ட நாகரா ஜுக்கு திவ்யா என்ற மனைவியும் 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். நாகராஜ் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தார்.

    அவரது கொலைக்கு பெண்தகராறு காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×