என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் விரைவில் புதிய பேருந்து நிலையம்- பணிகளை விரைந்து முடிக்க தனிக்குழு
- உலக அளவில் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு பெற்று நகரமாகவும் விளங்குகிறது.
- மாமல்லபுரம் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை வேகமாக முடிக்க அரசு முடிவு செய்துள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் வரும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் நிறுத்தவும், பயணிகள் அமர போதிய நிழல்குடை, கழிப்பறை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.
தற்போது உலக அளவில் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு பெற்று நகரமாகவும் விளங்குகிறது.
இவைகளை கருத்தில் கொண்டு திருக்கழுக்குன்றம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை இணையும் பகுதியில் உள்ள கருக்காத்தம்மன் கோவில் வட பகுதியில், 6.80 ஏக்கர் நிலத்தில் கலை நயத்துடன் பஸ் நிலையம் கட்ட அரசு திட்டமிட்டு, அதன் கட்டுமான பொறுப்புகளை சி.எம்.டி.ஏ.விடம் ஒப்படைத்தது.
இதில் 1.61 ஏக்கர் நிலம் தொல்லியல்துறை எல்லைக் கட்டுப்பாடு நிபந்தனைக்குள் வருவதால் திட்டம் தொய்வடைந்து வந்தது.
இந்நிலையில் ஏ.எஸ்.ஐ. என்று சொல்லக்கூடிய தொல்லியல்துறையின் தடை இல்லா சான்றுகளை விரைவில் பெற்று, மாமல்லபுரம் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை வேகமாக முடிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென தனி அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.






