என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பு.புளியம்பட்டியில் தாயை அடித்து கொன்ற மகன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு
    X

    பு.புளியம்பட்டியில் தாயை அடித்து கொன்ற மகன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

    • சுங்ககாரன்பாளையத்தை அடுத்த தேசிகிராமத்தை சேர்ந்தவர் அருள்செல்வன், காண்டிராக்டர். இவரது மனைவி யுவராணி.
    • கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள சுங்ககாரன்பாளையத்தை அடுத்த தேசிகிராமத்தை சேர்ந்தவர் அருள்செல்வன், காண்டிராக்டர். இவரது மனைவி யுவராணி (36). இவர் மின்சார வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சரியாக படிக்காததால் விடுதியில் சேர்க்க யுவராணி முடிவு செய்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகன் இரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது தாயை ஹாலோபிளாக் கல்லால் அடித்து கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயை அடித்து கொன்ற அவரது 15 வயது மகனை கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோட்டில் உள்ள இளைஞர் நீதிக்குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து அவர் கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×