என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் இன்று 2-வது நாளாக சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டம்
    X

    ஓசூரில் இன்று 2-வது நாளாக சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டம்

    • ஓசூரில் உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • மேலும், ஓசூர்-தளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர்:

    ஓசூரில் 2,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் வாகன உதிரி பாகங்கள் மற்றும் இதர பொறியியல் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கிறது.

    இந்த நிறுவனங்கள், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் ஜாப் ஆர்டர்களுக்கு உரிய நியாயமான விலையை வழங்க பெருநிறுவன வாடிக்கையாளர்கள் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியும், சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு சுமூக தீர்வு காணவும் வலியுறுத்தி, 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி, நேற்று, ஓசூரில் உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், ஓசூர்-தளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் 3,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்கள், பதாகைகளை ஏந்தியவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். வேலைநிறுத்த போராட்டம், 2-வது நாளாக இன்றும் தொடர்ந்தது.

    இதையொட்டி, ஓசூரில் அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இந்த 2 நாள் போராட்டத்தினால் ரூ.1,000 கோடி அளவில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×