search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் வணிகர் சங்கம் சார்பில் வருகிற 29-ந்தேதி கடைகள் அடைப்பு
    X

    சேலம் மாவட்டத்தில் வணிகர் சங்கம் சார்பில் வருகிற 29-ந்தேதி கடைகள் அடைப்பு

    • வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் ஒருநாள் கடையடைப்பு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • அன்று அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் எதுவும் திறக்கப்படாது.

    சேலம்:

    சேலம் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் அன்னதானபட்டியில் நேற்று நடந்தது. இதில், சரக்கு மற்று சேவை வரியால், வணிகர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகளை நீக்கும் வகையில், வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் ஒரு நாள் கடையடைப்பு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அன்று அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் எதுவும் திறக்கப்படாது. மேலும் அன்றைய தேதியில் அனைத்து வணிகர்கள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், சேலம் சரக்கு இணை ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×