என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலிகிராமத்தில் ஐ.டி.நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
    X

    சாலிகிராமத்தில் ஐ.டி.நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

    • வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கும்பகோணத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
    • கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    போரூர்:

    சாலிகிராமம் காவேரி ரங்கன் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுரேஷ். சாப்ட்வேர் என்ஜினீயர்.

    இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கும்பகோணத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து பீரோ லாக்கரில் இருந்த 25பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி சென்று விட்டனர்.

    நேற்று மாலை சுரேஷ் வீட்டுக்கு வந்தபோது நகை-பணம் கொள்ளை போனது தெரிந்தது.

    பால்கனி ஜன்னல் வழியாக புகுந்த கொள்ளையர்கள் நூதனமான முறையில் கைவரிசை காட்டி நகை பணத்தை சுருட்டி தப்பி இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×