என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடல் அரிப்பால் பாதிப்பு- மீனவ கிராம மக்கள் சாலை மறியல்
    X

    கடல் அரிப்பால் பாதிப்பு- மீனவ கிராம மக்கள் சாலை மறியல்

    • புதுவை காலாப்பட்டு மற்றும் பிள்ளைச்சாவடி மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க கல் கொட்டப்படுகிறது.
    • கிழக்கு கடற்கரை சாலையில் 30 நிமிடத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு மற்றும் பிள்ளைச்சாவடி மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க கல் கொட்டப்படுகிறது.

    இந்த 2 மீனவ கிராமங்களுக்கு இடையில் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு பிள்ளைச்சாவடி என்ற கிராமம் உள்ளது.இந்த கிராமத்துக்குள் கடல் நீர் உள் புகுந்து வருகிறது.

    இங்கும் கல் கொட்ட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு மீனவர்கள் சார்பில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று கடல் சீற்றம் காரணமாக 3 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

    ஏற்கனவே இந்த பகுதியில் கடல் சீற்றம், கனமழை போன்ற காரணத்தினால் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இவற்றைத் தடுக்க கல் கொட்ட மீனவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததை கண்டித்து இன்று பிள்ளைச்சாவடி மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியல் காரணமாக பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் மாணவர்களும் பொதுமக்களும் தங்களது இடங்களுக்கு நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    இதனிடையே கோட்டக்குப்பம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 30 நிமிடத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    Next Story
    ×