என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே பள்ளி வாகனம் மோதி சிறுவன் பலி
- விபத்தில் மெய்யழகனுக்கு தலை, கை, கால்கள் படுகாயம் ஏற்பட்டது.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருப்பூர்:
சேலம் அருகே உள்ள கருப்பூர் கொல்லத் தெரு பகுதி சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாரதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இதில் மகன் மெய்யரசு ( வயது 16) சேலத்தில் உள்ள பள்ளியில் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகி வந்தான், இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கருப்பூர் அருகே காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவை காண செல்வதாக வீட்டில் கூறி விட்டு மெய்யரசு மோட்டார் சைக்கிளில் சென்றார் . அப்பொழுது கருப்பூர் ரெயில்வே சுரங்க பாலம் அருகே எதிரில் தனியார் பள்ளி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராமல் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மெய்யழகனுக்கு தலை, கை, கால்கள் முறிந்தது. அவரை சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மெய்யரசு பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து கருப்பூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி, வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






