search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐகோர்ட்டு நிபந்தனையின்படி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட சவுக்கு சங்கர்
    X

    ஐகோர்ட்டு நிபந்தனையின்படி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட சவுக்கு சங்கர்

    • மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த நிபந்தனையின் அடிப்படையில் மதுரை வந்த சவுக்கு சங்கர் இன்று காலை மாவட்ட 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு தனது வக்கீலுடன் வந்தார்.
    • கோர்ட்டு அலுவலகத்தில் இருந்த பதிவேட்டில் சவுக்கு சங்கர் கையெழுத்திட்டு சென்றார்.

    மதுரை:

    சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக யூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கைதாகி, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், தண்டனையை ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சவுக்கு சங்கருக்கு ஜாமீன் நிபந்தனைகளை மதுரை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் பிறப்பித்தது. அதில், மதுரை மாவட்ட 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தது. இதனை ஏற்று சவுக்கு சங்கர் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

    மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த நிபந்தனையின் அடிப்படையில் மதுரை வந்த சவுக்கு சங்கர் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு தனது வக்கீலுடன் வந்தார். கோர்ட்டு அலுவலகத்தில் இருந்த பதிவேட்டில் சவுக்கு சங்கர் கையெழுத்திட்டு சென்றார்.

    Next Story
    ×