என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியபாளையத்தில் ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் காலி தட்டு ஏந்தி போராட்டம்
    X

    பெரியபாளையத்தில் ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் காலி தட்டு ஏந்தி போராட்டம்

    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், பென்ஷன் தொகை ரூ.7,850, அக விலைப்படி 3 சதவீதம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று மாலை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் காலி தட்டு ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் ஒரு பகுதியாக பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இதற்கு ஹென்றி தலைமை தாங்கினார். மணி, ஞானமூர்த்தி, துரைசாமி, நிர்மலா முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் எல்லாபுரம் ஒன்றிய தலைவர் சிவலிங்கம், மாவட்ட பொருளாளர் உஷாராணி, ஒன்றிய செயலாளர் தினேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், மாவட்ட தலைவர் சிவா கலந்து கொண்டு பேசினார். ஜெயா நன்றி கூறினார்.

    Next Story
    ×