search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் பாதாள சாக்கடை பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்த வாலிபர் மீட்பு
    X

    பொன்னேரியில் பாதாள சாக்கடை பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்த வாலிபர் மீட்பு

    • பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு அமைக்காமலும், கயிறு கட்டாமலும் இருந்தது.
    • ஆமை வேகத்தில் நடை பெறுவதாகவும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி தச்சூர் சாலை எம்.ஜி.ஆர். நகர் அருகில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு அமைக்காமலும், கயிறு கட்டாமலும் இருந்தது. அவ்வழியாக வந்த பொன்னேரி வள்ளலார் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் (48) இருசக்கர வாகனத்துடன் அந்த 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் வரவ ழைக்கப்பட்டு கயிறு கட்டி அவரை மேலே தூக்கி எடுத்தனர்.

    அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய நிலையில் அப்பகுதி மக்கள் பாதாள சாக்கடை திட்டப் பணி ஆமை வேகத்தில் நடை பெறுவதாகவும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    Next Story
    ×