என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே லாரியில் அனுமதியின்றி கொண்டு சென்ற 32 எருமை மாடுகள் மீட்பு
    X

    கோப்பு படம்

    திருவள்ளூர் அருகே லாரியில் அனுமதியின்றி கொண்டு சென்ற 32 எருமை மாடுகள் மீட்பு

    • கேரளாவுக்கு உரிய அனுமதியின்றி மாடுகள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
    • எருமை மாடுகைளை திருவலாங்காட்டில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் வழியாக கேரளாவுக்கு உரிய அனுமதியின்றி மாடுகள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதேபோல் ஏராளமான எருமை மாடுகள் ஒரே லாரியில் அடைத்து கொண்டு செல்லப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு 400 அடி பைபாஸ் சாலையில் ஆந்திராவில் இருந்து கேராள நோக்கி சென்ற லாரியை நிறுத்தி விலங்குகள் நல ஆர்வலர்கள் சோதனை செய்தனர்.

    அதில் உரிய அனுமதியின்றி ஏராளமான எருமைமாடுகள் கேரளாவுக்கு கொண்டு செல்வது தெரிந்தது. இதையடுத்து லாரியைதடுத்து நிறுத்தி அதில் இருந்த 32 மாடுகளை மீட்டனர். பின்னர் அவற்றை வெள்ளவேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மீட்கப்பட்ட எருமை மாடுகைளை திருவலாங்காட்டில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக லாரியில் இருந்த கேரளாவை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×