என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணலி புதுநகரில் கால்வாய் ஆக்கிரமிப்பில் இருந்த 43 கடைகள்-கட்சி அலுவலகங்கள் அகற்றம்
- மணலி புதுநகர் பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டு இருந்தன.
- வீடுகள் முழுவதும் ஒரு வாரத்திற்குள் படிப்படியாக அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொன்னேரி:
மணலி புதுநகர் பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டு இருந்தன.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரின் உத்தரவுப்படி ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 226 வீடுகள்,43 கடைகள் , 8 கட்சி அலுவலகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அப்பகுதியில் வசித்து வருபவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருவொற்றியூர் பஞ்செட்டி- பொன்னேரி நெடுஞ்சாலை முதல் மகாலட்சுமி நகர் வரை கால்வாயை ஆக்கிரமித்து இருந்த கட்டிடங்களை அகற்ற நகராட்சி மண்டல அலுவலர் கோவிந்தராசு தலைமையில், அதிகாரிகள் வந்தனர். 5 ஜே. சி .பி. எந்திரங்கள், ஒரு பளு தூக்கும் எந்திரம்,8 லாரிகள் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
மொத்தம் 43 கடைகள்,8 கட்சி அலுவலகங்கள் முழுவதும் முதலில் அகற்றப்பட்டன. வீடுகள் முழுவதும் ஒரு வாரத்திற்குள் படிப்படியாக அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது செயற்பொறியாளர் காமராஜ், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் நக்கீரன், உதவி பொறியாளர் சோமசுந்தர்ராஜ் உடன் இருந்தனர். மணலிபுதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடி ராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






